19th April 2024 20:02:45 Hours
இலங்கை இராணுவ தொண்டர் படையணியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உள்ளக பூப்பந்து மைதானம் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ மற்றும் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் எம்.டி.கே.ஆர் சில்வா கேஎஸ்பீ ஆகியோரினால் 2024 ஏப்ரல் 17 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
அதன் உத்தியோகபூர்வ திறப்பை குறிக்கும் வகையில், மைதானத்தின் பதாகையை தளபதி திறந்து வைத்துடன், மைதானத்தின் செயல்பாடுகளின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் முதலாவது ஆட்டத்தையும் அவர் விளையாடினார். உள்ளக பூப்பந்து மைதானம் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் உட்கட்டமைப்பிற்கு அழகு சேர்ப்பதுடன், உறுப்பினர்களுக்கு உடல் நலனை மேம்படுத்துவதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நவீன வசதியை கொஸ்கம பொறியியல் படையணி மற்றும் 10 வது (தொ) இலங்கை இராணுவ பொறியியல் சேவைகள் படையணியின் கூட்டு முயற்சிகளலை நிர்மாணிக்கப்பட்டது.
நிகழ்வின் போது இராணுவ தொண்டர் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.