28th November 2023 09:16:02 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் ஜீஎம்என் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் புதிய உபகரண பணிப்பாளர் நாயகமாக வெள்ளிக்கிழமை (நவம்பர் 24) இராணுவத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
மேஜர் ஜெனரல் ஜீஎம்என் பெரேரா அவர்கள் தனது புதிய பதவியை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும் வகையில் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொழுத்திட்டார்.
இந்த நியமனத்திற்கு முன்னர் அவர் 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றினார். இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.