26th May 2023 11:03:07 Hours
நிரந்தரமாக காயமடைந்த போர்வீரர்களின் மன உறுதி மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், செவ்வாய்க்கிழமை ( 23 மே) இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே, பல சிரேஷ்ட அதிகாரிகளுடன் ராகம ரணவிரு செவனவிற்கு விஜயம் செய்தார்.
இந்த விஜயத்தின் போது, திருமதி லியனகே அவர்கள் அங்கு வசிக்கும் போர் வீரர்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் நலன்களையும் அவர்களது குடும்பத்தினரையும், தேவைகளையும் கேட்டறிந்தார்.
வளாகத்திற்குள் செயற்கை காலணிகள் மற்றும் கால்கள் தயாரிக்கும் பிரிவை பார்வையிட்ட அவர், அந்த பிரிவில் பணிபுரியும் போர் வீரர்களுடன் கருத்துக்களை பரிமாறிக்கொண்டார்.
அவர் புறப்படுவதற்கு முன், போர்வீரர்களுக்கு பரிசுப் பொதிகளை வழங்கியதுடன் அவர்களின் மறுவாழ்வு செயல்முறைக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பின்னர் அதிதிகள் பதிவேட்டில் எண்ணங்களை பதிவிட்டார்.
இந் நிகழ்வில் புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் எஸ்சி ஏக்கநாயக்க ஆர்எஸ்பீ, ரணவிரு செவன தளபதி பிரிகேடியர் பிஎன் மதநாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு, பிரிகேடியர் என். மகாவிதான கேஎஸ்பீ, பல சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.