22nd February 2023 19:59:14 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் கற்றல் நடைமுறைகள் மற்றும் நிர்வாக விடயங்களின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்காக செவ்வாய்க்கிழமை (பெப்ரவரி 21) பல்லேகலவில் அமைந்துள்ள இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் நிர்வகிக்கப்படும் ‘விரு கெகுலு’ பாலர் பாடசாலைக்கு மற்றும் பகல்நேர பராமரிப்பு நிலையத்திற்கு இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர் திருமதி துஷாரி அலுவிஹாரே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க விஜயம் செய்தார்.
திருமதி துஷாரி அலுவிஹாரே மற்றும் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் இரு குழந்தைகள் அன்றைய பிரதம அதிதியை அன்புடன் வரவேற்பதற்கு முன்னதாக முன்பள்ளி ஊழியர்களுடன் பிரதம அதிதி கலந்துரையாடி மேலும் மேம்பாடுகளுக்கு வழிகாட்டினார். பின்னர் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் அன்றைய விருந்தினர் பிள்ளைகளுக்கு பழச்சாறு போத்தல்களை வழங்கியதனை தொடர்ந்து அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் விருந்தினர்களுடன் தேனீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார்.
இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் இராணுவ அங்கத்தவர்களின் குடும்பங்கள் மற்றும் இராணுவ அங்கத்துவம் அல்லாத குடும்பங்களில் உள்ள சிறுவர்களின் நலனுக்காக நாடளாவிய ரீதியில் பாலர் பாடசாலை மற்றும் பராமரிப்பு நிலையங்களை நிர்வகிக்கிறது.
இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி அவ்விடத்தினை விட்டு வெளியோறுவதற்கு முன்னதாக அனைவருடனும் குழுப்படம் ஒன்றினை எடுத்துக்கொண்டதுடன் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டார். பின்னர் பல்லேகல இராணுவத் தள வைத்தியசாலைக்கு அருகில் உள்ள இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவி சிற்றுண்டிச்சாலை அமைந்துள்ள புதிய கட்டிடத்தை பார்வையிட்டார்.
11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹாரே, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அன்றைய நிகழ்வில் கலந்து கொண்டனர்.