Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th March 2019 08:00:55 Hours

இராணுவ கௌரவ மரியாதையுடன் இடம்பெற்ற மரணச் சடங்கு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின்ஏற்பாட்டில் ஓய்வு பெற்ற இலங்கை படைக்கலச் சிறப்பணியின் முன்னாள் இராணுவ வீரனான கோப்ரல் எஸ். எஸ் சுபரத்னம் அவர்களது மரணச் சடங்குகள் யாழ்ப்பாணம் கோப்பாய் பொது மையானத்தில் இம் மாதம் (8) ஆம் திகதி இராணுவத்தினரது பூரண கௌரவ மரியாதையுடன் இவரது பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டது.

இவர் இலங்கை இராணுவத்தில் 1958 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி 1 ஆவது படைக்கலச் சிறப்பணியில் இணைந்து 1981 ஆம் ஆண்டு தனது 22 வருட சேவைகளை முழுமையாக்கி இராணுவத்திலிருந்து ஓய்வூ பெற்றார். இவர் நீண்ட சேவைக்கால பதக்கம், ஜனாதிபதி பதக்கம், 25 ஆவது இராணுவ ஆண்டு பதக்கங்களை தனது சேவைக் காலத்தினுள் பெற்றுள்ளார்.

51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்ன அவர்களது தலைமையில் இராணுவத்தினரது பங்களிப்புடன் இராணுவ கௌரவ மரியாதைகள் இவரது மரணச் சடங்கில் வழங்கப்பட்டன. இவரது மரண வீட்டு விலாசம் 2 ஆவது தபால், ராஜா வீதி, கோப்பாய். buy shoes | Air Jordan 1 Retro High OG Retro High OG Hyper Royal 555088-402 , Fitforhealth