11th September 2018 13:59:54 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது வழிக் காட்டலின் கீழ் 57, 65, 66 ஆவது படைப் பிரிவுகளைச் சேர்ந்த 100 இராணுவ அதிகாரிகளுக்கு 'இடைக்கால நீதி மற்றும் அதன் உலகளாவிய தாக்கம்' தொடர்பான செயலமர்வு (8) ஆம் திகதி சனிக் கிழமை கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தினுள் இடம்பெற்றன.
பண்டாரநாயக்க சர்வதேச கல்வி நிலையத்தின் (BCIS) சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் தயானி சுமித்ரா பனாகொட அவர்களினால் இந்த விரிவுரைகள் இராணுவ அதிகாரிகளுக்கு நிகழ்த்தப்பட்டன.
இந்த செயலமர்வில் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து கொண்டனர். jordan release date | adidas Yeezy Boost 350