12th July 2023 20:12:21 Hours
பொல்ஹெங்கொடவில் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி தலைமையகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சிரேஷ்ட அதிகாரிகள் வதிவிட விடுதி வளாகத்தின் முதல் மாடி செவ்வாய்க்கிழமை (ஜூலை 11) இராணுவப் பொலிஸ் படையணியின் படைத் தளபதியும் ஒழுக்க பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் எசிஎ டி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இவ் வளாகம் ஆறு வசதியான அறைகளைக் கொண்டுள்ளதுடன் இராணுவம் மற்றும் இராணுவப் பொலிஸ் படையணியின் நிதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் நிலைய தளபதி பிரிகேடியர் ஏஎம்ஆர் அபேசிங்க, விசேட புலனாய்வுப் பிரிவின் கட்டளை அதிகாரி கேர்ணல் எம்எம்எம்பி மகேஷ் குமார, இராணுவப் பொலிஸ் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர்.