Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th November 2023 00:26:47 Hours

இராணுவப் பயிற்சி பாடசாலையில் கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் வனபோர்யுத்திகள் பயிற்சி எண்-33,35ன் சான்றிதழ் வழங்கல்

மாதுருஓயா இராணுவப் பயிற்சி பாடசாலையில் இராணுவப் பயிற்சியில் அதிகாரிகளுக்கான பதக்கங்கள் வழங்கும் விழா, அதிகாரிகளின் கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் வனபோர்யுத்திகள் பயிற்சி எண்-33 மற்றும் எண்-35ன் விடுகை அணிவகுப்பு தனித்தனியாக இடம்பெற்றன. இவ்விரண்டு நிகழ்ச்சியிலும் பிரதம அதிதியாக மாதுருஓயா இராணுவப் பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் எல்.ஜி.ஜே.என் ஆரியதிலக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் கலந்து கொண்டார்.

கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் வனபோர்யுத்திகள் பயிற்சி எண்-33 இல் 31 அதிகாரிகள் உட்பட பங்களதேசத்தைச் சேர்ந்த 1 வெளிநாட்டு அதிகாரியும் பயிற்சியில் இருந்தார். பாடநெறியின் சிறந்த மாணவ அதிகாரிக்கான விருந்து விஜயபாகு காலாட் படையணியின் கெப்டன் எம்.குணவர்தன அவர்களுக்கு வழங்கப்பட்டது.

கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் வனபோர்யுத்திகள் பயிற்சி எண்-35ஐவெற்றிகரமாக முடித்த 59 வீரர்களுக்கு வியாழக்கிழமை (நவம்பர் 16) சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கோப்ரல் ஏ.ஜி.சி.என் அமரசூரிய பாடநெறியில் சிறந்த மாணவராக தெரிவு செய்யப்பட்டார்.

விரிவுரைகள் மற்றும் வெளிப்புற பயிற்சிகள் இரண்டு பாடநெறிகளும் பயிற்சி தொகுதிகளில் அடங்கும். இராணுவப் பயிற்சி பாடசாலையின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.