27th March 2024 14:59:32 Hours
பனாகொட இராணுவ நலன்புரி நிதிய பணிப்பகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி பதிவு அறை 26 மார்ச் 2024 அன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுக் கொண்டார். இராணுவ நலன்புரி நிதிய பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பீஆர் சமரவீர அவர்கள் இராணுவ தளபதியை வரவேற்கப்பட்டதை தொடர்ந்து பதாகை திரை நீக்கம் செய்ததுடன் மற்றும் நாடா வெட்டி கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது. தொடர்ந்து பங்கேற்பாளர்கள் புதிய மூன்று மாடி கட்டிடத்தை ஆய்வு செய்தனர். இது பணிப்பகத்தின் முக்கிய ஆவணங்கள் மற்றும் பதிவுகளை சேமிப்பதற்கான இடமாக செயல்படுகிறது.
இப்பணிப்பகம் செயல்பாடுகளுக்கு முக்கியமான தகவல்களை திறம்பட நிர்வகித்தல் மற்றும் பாதுகாப்பது போன்ற சவாலை நீண்ட காலமாக எதிர்கொண்டுள்ளது. இந்தத் தேவையை நிவர்த்தி செய்ய பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய வசதியை ஸ்தாபிப்பதன் மூலம் சவாலை தீர்க்கப்பட்டுள்ளது. பொறியியல் சேவை படையணியின் படையினர் இத் திட்டத்திற்கு பணியாளர் உதவியை வழங்கி இந்த பணியை சரியான நேரத்தில் நிறைவு செய்தனர்.
இந்நாளை நினைவு கூறும் வகையில் இராணுவத் தளபதி குழு படம் எடுத்துகொண்டதுடன் வளாகத்தில் சந்தன மரக்கன்று ஒன்றையும் நட்டுவைத்தார்.
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ்சீ, மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ, பிரதான பதவி நிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.