Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th November 2022 19:16:35 Hours

இராணுவத்திலிருந்து ஓய்வு பெறும் கஜபா படையணி வீரருக்கு தளபதி வாழ்த்து

இராணுவ பதவி நிலைப் பிரதானியின் அனைத்து பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ஓய்வுபெறும் கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் எல்பிகேசி. விஜேதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்கள் தளபதியின் அழைப்பின் பேரில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் வியாழக்கிழமை (10) இராணுவ தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை சந்தித்தார்.

33 வருடங்களுக்கும் மேலாக இராணுவத்தில் முன்மாதிரியான முறையில் சேவையாற்றிய மேஜர் ஜெனரல் எல்பிகேசி. விஜேதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்கள் முறையான சந்திப்பின் போது இராணுவத் தளபதியிடமிருந்து பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்றார்.

மே 2009 க்கு முன்னர் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் உச்சக்கட்டத்தின் போது ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரி ஆற்றிய பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பு பாத்திரங்கள் பற்றிய நினைவுகளையும் அவர் நினைவு கூந்தார். அதேபோன்று, இராணுவத் தளபதி அவரது குடும்ப உறுப்பினர்களுடன் தனது சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டதுடன், இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்ட அவர், ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்கால முயற்சிகள் மற்றும் திட்டங்களையும் கேட்டறிந்தார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியும் இராணுவத் தளபதியின் வாழ்த்துக்களுக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி தெரிவித்ததுடன், தனது கடமைகளை நிறைவேற்றுவதில் தாம் பெற்ற ஊக்கத்தையும் குறிப்பிட்டார். கலந்துரையாடலின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், ஓய்வு பெறும் மேஜர் ஜெனரல் எல்பிகேசி விஜேதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்களுக்கு சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கினார்.

அவரது பதவிக் காலத்தில், அணி தளபதி, புலனாய்வு அதிகாரி, நிறைவேற்று அதிகாரி, குழு தளபதி, பிரிகேட் மேஜர், பொதுப்பணி அதிகாரி 1 (செயல்பாடுகள்), கட்டளை அதிகாரி, சிரேஷ்ட பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி, கேணல் பொதுப்பணி, படையணி நிலையத் தளபதி, 211 மற்றும் 141 வது பிரிகேட் தளபதி, போக்குவரத்து பணிப்பகத்தின் பணிப்பாளர், மற்றும் அனைத்து பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் போன்ற நியமனங்களை அவர் வகித்தார்.

மேஜர் ஜெனரல் எல்பிகேசி விஜேதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்கள் 1989 ஜனவரி 20 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியின் பயிலிளவல் அதிகாரியாக சேர்க்கப்பட்டார்.

இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி மற்றும் பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரி என தனது இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், அவர் இரண்டாவது லெப்டினன் நிலைக்கு நியமிக்கப்பட்டார். மேலும் 1990 ஒக்டோபர் 05 அன்று கஜபா படையணியில் நியமிக்கப்பட்டதுடன், அவர் 04 பெப்ரவரி 2022 அன்று மேஜர் ஜெனரலாக நிலை உயர்வு பெற்றார்.

போர்க்களங்களில் அவரது வீரம் மற்றும் துணிச்சலுக்காக, அவருக்கு ரண விக்கிரம பதக்கம் மற்றும் ரண சூர பதக்கம் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.