Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th April 2023 21:05:13 Hours

இராணுவத்தின் தலைமைத்துவ பயிற்சியில் மாணவர்கள் பங்கேற்பு

பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 2023 ஏப்ரல் 16 முதல் 18 வரை கண்டி புனித அந்தோனியார் கல்லூரியின் 54 மாணவர்களுக்கு மின்னேரிய காலாட்படை பயிற்சி நிலையத்தில் மூன்று நாள் தலைமைத்துவ பயிற்சி பட்டறை நடாத்தப்பட்டது.

இராணுவத் தளபதியின் ஆசீர்வாதத்துடன், அவர்களின் தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பதற்கும், அதிகரிப்பதற்கும், திறன்களை வளர்ப்பதற்கும், சவால்களை எதிர்கொள்ளவும், ஒழுக்கத்துடன் அவர்களின் திறமைகள் மற்றும் திறன்களை வளர்க்கவும் இந்த பயிற்சி பட்டறை நோக்கமாக இருந்தது.

காலாட்படை பயிற்சி நிலையத்தின் தளபதி பிரிகேடியர் டபிள்யூஎஸ்கே லியனவடுகே ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது. பயிலரங்கில் உடற் பயிற்சிகள், விரிவுரைகள், கலந்துரையாடல்கள் மற்றும் பிற குழு பயிற்சி நடவடிக்கைகள் உள்ளடங்கிருந்தன.