Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவத்தினர் மற்றும் சிவில் கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி

இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களிடையேயான நல்லிணக்கத்தை மேம் படுத்தும் முகமாக ,59 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் கீழ் உள்ள நாயாரில் அமைந்துள்ள 593 ஆவது பிரிகேட் படைத் தலைமையகத்தில் கீழ் உள்ள 19 ஆவது பட்டாலியன் கொமுனு ஹேவா படையினர் மற்றும் 4 சிவில் கிரிக்கெட் கழகத்திற்கும் இடையில் ஞாயிற்றுக்கிழமை 13 ஆம் திகதி 593 ஆவது பிரிகேட் படைத் தலைமையக விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் போட்டி இடம்பெற்றது. குறித்த போட்டியில் படையினர் சம்பியன்ஷிப்பை சுவிகரித்துக்கொண்டனர்.

59 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பியந்த பெரேரா அவர்களின் வழிக்காட்டலின் கீழ் மற்றும் 593 ஆவது பிரிகேட் படையின் தளபதி பிரிகேடியர் வசந்த பலமகும்புர அவர்களின் மேற் பார்வையில் இறுதி போட்டியானது 19 ஆவது கெமுனு ஹேவா கிரிக்கெட் அணிக்கும் மற்றும் கோக்கிலாய் விக்னேஷ்வரன் விளையாட்டு கழகத்திற்கும் இடையில் இடம்பெற்றது.

குறித்த இறுதி போட்டியில் 19 ஆவது கெமுனு ஹேவா கிரிக்கெட் அணியானது 68 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. விக்னேஷ்வரன் விளையாட்டு கழகமானது 62 ஓட்டங்களை பெற்றது. bridge media | NIKE