12th February 2019 10:54:02 Hours
நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை மேற்கொள்ளும் நோக்கில் பாடசாலை கெடெட் பயிற்சிகள் மற்றும் மேலைத்தே பேட்டு வாத்தியத்தை மேம்படுத்தும் நோக்கிலான கல்விசார் விழிப்புணர்வு பயிற்சிகள் யாழ் மாவட்டத்தின் 30 பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட 750 மாணவர்கள் மற்றும் தெற்கு பிரதேசத்தில் காணப்படும் பாடசாலைகளில் இருந்து 200 மாணவர்கள் போன்றோரின் பங்களிப்போடு யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் கடந்த (7-9 பெப்ரவரி) திகதிகளில் இடம் பெற்றது.
அந்த வகையில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் வழிகாட்டலில் இம் மூன்று நாள் பயிற்சியை தேசிய கெடெட் படையணியின் பயிற்றுவிப்பாளர்கள் வழங்கியுள்ளனர்.
அத்துடன் இராணுவத்தின் தேசிய கெடெட் படையினர் இப் பயிற்றுவிப்பு பயிற்சிகளுக்கான ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் வழங்கினர்.
இந் நிகழ்விற்கான இறுதிக் கட்ட நிகழ்வானது கடந்த சனிக் கிழமை (09) யாழ் பாதுகாப்ப படைத் தளபதியவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது வட மாகான ஆளுனர் யாழ் மாவட்ட செயலாளர் யாழ் மாவட்ட மேயர் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி தேசிய கெடெட் படையணியின் பணிப்பாளர் இந்திய தூதரகத்தின் பொதுச் செயலாளர் இராணுவத்தின் பிரிகேடியர்கள் போன்ற அதிகாரிகள் முப்படைகளினதும் உயர் அதிகாரிகள் வடக்கின் வலயக்கல்வி பணிப்பாளர் வலயக் கல்விப் பணிப்பகத்தின் அதிகாரிகள் முல்லைத் தீவு பிரதேசத்தின் மதத் தலைவர்கள் யாழ் உயர் நீதிமன்றத்தின் நீதவான் அரச அதிகாரிகள் கெடெட் படையணியினர் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். Best Sneakers | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf