06th June 2023 17:17:32 Hours
இயந்திரவியல் காலாட் படையணியின் அதிகாரிகளுக்கான பயிற்சி நாள் 26 மே 2023 அன்று சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டது.
முதல் நாள் நடவடிக்கைகள் காலை உடற் பயிற்சி அமர்வுகளுடன் ஆரம்பமாகியது, அதைத் தொடர்ந்து அணிநடை மற்றும் வாள் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இதற்கிடையில், 1 வது இயந்திரவியல் காலாட் படையணியின் அதிகாரிகள், அவசரகால அனர்த்த நிவாரணப் படைக்கு பதிலளிக்கும் முயற்சியில் மாதிரி முன் வைப்பை நடாத்தினர்.
இராணுவ செயலாளர் கிளையின் பணிநிலை அதிகாரி -1 லெப்டினன் கேணல் ஆர்எம்எச்பி ரத்நாயக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் ‘அதிகாரிகளின் தொழில் முன்னேற்றம்’ என்ற தலைப்பில் விரிவுரையையும் நடாத்தினர்.
படையணியின் அதிகாரிகள் உணவகத்தில் இரவு உணவு அமர்வின் போது, 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்எம்யூ ஹேரத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ எச்டிஎம்சி பீஎஸ்சி 'சமச்சீரற்ற போர்' என்ற தலைப்பில் ஒரு விரிவுரையை ஆற்றினார்.
இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியும், மேற்கு - பாதுகாப்புப் படை தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, மற்றும் இயந்திரவியல் காலாட் படையணியின் நிலைய தளபதி ஆகியோரின் வழிகாட்டுதல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ் இப் பயிற்சி நாள் ஏற்பாடு செய்யப்பட்டது.