08th November 2022 22:34:28 Hours
இயந்திரவியல் காலாட் படையணியின் சிப்பாய்களஞக்கான வீட்டு நிர்மாண திட்டத்தின் கீழ் வலப்பனை முன்வத்தையில் நிர்மாணிக்கப்பட்ட மூன்றாவது புதிய வீடு புதன்கிழமை (2) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியும் பிரதிப் பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைவாக இயந்திரவியல் காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவுடன் இணைந்து பல வாரங்களுக்கு முன் ஐந்து கட்டங்களில் கீழ் இவ் வீடு கட்டும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 5 வது இயந்திரவியல் காலாட் படையணியின் வீரர்களுக்குத் திட்டமிடப்பட்ட ஐந்து வீடுகளில் இரண்டு வீடுகள் முன்பதாக கட்டப்பட்டி முடிக்கப்பட்டு, அதே திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.
53 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உதய ஹேரத், புதன்கிழமை (02) படையணியின் படைத் தளபதி சார்பாக, பதவி நிலை சார்ஜன் ஒருவருக்கு இந்த புதிய வீட்டை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார் கையளித்தார். இத் திட்டத்திற்கு இயந்திரவியல் காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவு மற்றும் 3 வது இயந்திரவியல் காலாட் படையணி இணைந்து நிதி உதவி வழங்கினர்.
நிலைய தளபதி பிரிகேடியர் அனுர அபேசிங்க, 3 வது இயந்திரவியல் காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, லெப்டினன் கேணல் எம்டிபி முஹந்திரம்கே மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள்/ பதவி நிலை அதிகாரிகள் என பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.