06th June 2023 17:26:06 Hours
‘பொசன்’ பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இயந்திரவியல் காலாட் படையணியில் ‘பொசோன்’ தானம் (மரவல்லி கிழங்கு) மற்றும் பக்தி கீதம் போன்றவை இடம்பெற்றன.
இயந்திரவியல் காலாட் படையணியின் தளபதியும் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையில் இயந்திரவியல் காலாட் படையணியின் தளபதி பிரிகேடியர் ஏஎம்ஏ அபேசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஆகியோரின் நெருக்கமான மேற்பார்வையுடன் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இயந்திரவியல் காலாட் படையணியின் சேவை வனிதையர்பிரிவின் தலைவி திருமதி ஹிமாலி புஸ்ஸல்ல அவர்களின் ஆலோசனையின் பேரில் இத் திட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 04) தம்புள்ளை தம்புலுஹல் மில்லவெவ மாதிரிப் பாடசாலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் சம்பிரதாய மங்கள விளக்கேற்றியதை தொடர்ந்து பக்தி கீதம் ஆரம்பமானது. தம்புள்ளை அ/தம்புளுஹல் மில்லவெவ மாதிரிப் பாடசாலையின் 189 மாணவர்களும் 15 ஆசிரியர்களும், இயந்திரவியல் காலாட் படையணியின் 21 உறுப்பினர்களும் பக்தி கீதத்தை பாடி இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அதற்கமைய , இயந்திரவியல் காலாட் படையணியின் இசை குழுவினர் இந் நிகழ்விற்கு இசை வழங்கினர்.
இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்எம்யூ ஹேரத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எச்டிஎம்சி பீஎஸ்சீ, இயந்திரவியல் காலாட் படையணியின், சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் என பலர் கலந்துக்கொண்டனர். இயந்திரவியல் காலாட் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலரும் கலந்து கொண்டனர்.