Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th December 2022 19:32:10 Hours

இயந்திரவியல் காலாட் படையணியின் ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு மரியாதை

சிரேஷ்ட அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜனக பிரியதர்ஷன அவர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்தினரால் டிசம்பர் 5 மற்றும் 6 ம் திகதிகளில் அவரை படையணி தலைமையகத்திற்கு அழைத்து பிரியாவிடை மரியாதை செலுத்தப்பட்டது.

பிரதம அதிதியை இயந்திரவியல் காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் காவிந்த பாலசூரிய மற்றும் நிலைய தளபதி பிரிகேடியர் அனுர அபேசிங்க ஆகியோர் அன்புடன் வரவேற்றனர்.

அன்றைய பிரதம அதிதியின் வருகையின் பின்னர் இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்தின் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து பிரியாவிடை நிகழ்வு இடம் பெற்றது.

பின்னர், இயந்திரவியல் காலாட் படையணியில் மரணித்த போர் வீரர் நினைவு தூபியில் வீரமரணம் அடைந்த இயந்திரவியல் காலாட் படையணி படையினருக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு படையினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

மறுநாள் (6) வீதி வரிசை பிரியாவிடை மரியாதையுடன் நிகழ்வு முடிவுக்கு வந்தது.