25th January 2023 21:49:12 Hours
இப்பலோகமவில் உள்ள ஆட்சேர்ப்பு பயிற்சி நிலையத்தில் ஆட்சேர்ப்பு பயிற்சி பாடநெறி எண்-53 இன் விடுகை அணிவகுப்பு சிரேஷ்ட அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் பங்குபற்றலில் அண்மையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிகாரியாக 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உபுல் வீரகோன் அவர்கள் இராணுவ சம்பிரதாயங்களுக்கு இணங்க 471 ஆட்சேர்ப்பு சிப்பாய்களின் விடுகை அணிவகுப்பினை மதிப்பாய்வு செய்தார்.
சிப்பாய் எஸ்.எம்.கே.எல் பண்டார, சிப்பாய் ஆர்.எச்.டி.எச்.தர்ஷன மற்றும் சிப்பாய் டபிள்யூ.ஐ.சி பண்டார ஆகியோர் முறையே சகல துறையிலும் சிறந்தவர், சிறந்த உடல் தகுதி மற்றும் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர் ஆகிய சான்றிதழ்கள் பெற்றுக்கொண்டனர்.
படையினருக்கான உரையுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.