11th June 2019 17:59:10 Hours
புதுதில்லியிலுள்ள இந்தோனிஷியா தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரியான கெப்டன் அசடி யாசின் யமுௗர் பிரபுடி அவர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை இம் மாதம் (11) ஆம் திகதி இராணுவ தலைமையகத்திற்கு சென்று சந்திப்பினை மேற்கொண்டார்.
இச்சந்திப்பின் போது இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருதரப்பு பிரச்சினைகள் பற்றிய கருத்துக்களை பரிமாறிக் கொண்டதுடன், அன்மையில் இலங்கையில் ஏற்பட்ட தாக்குதல் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
எதிர்வரும் தினங்களில் இந்தோனிஷியா தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி கடற்படைத் தளபதி, விமானப்படைத் தளபதி அவர்களை சந்திந்து கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike shoes | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE