Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th March 2023 19:10:20 Hours

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் வன்னி தளபதியை சந்திப்பு

இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் புனீத் சுசில் அவர்கள் புதன்கிழமை (29) வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

லெப்டினன் கேணல் புனீத் சுசில் அவர்களை வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி, பணிநிலை அதிகாரிகள் இணைந்து வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க அவர்களின் அலுவலகத்தில் வைத்து மரியாதையுடன் வரவேற்றனர்.

இந்த சந்திப்பின் போது, பாதுகாப்பு, சமூக மேம்பாடு, சிவில்-இராணுவ ஒத்துழைப்பு, சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தை தடுப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தியதுடன், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வகிப்பங்குகள் குறித்தும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

கலந்துரையாடலின் முடிவில், வருகை தந்த உதவி பாதுகாப்பு ஆலோசகர் அதிதி பதிவேட்டு புத்தகத்தில் தனது என்னங்களையும் பாராட்டுக்களையும் பதிவிட்டார்.

இதன் போது அடையாள சின்னங்களின் பரிமாற்றம், சுமுகமான சந்திப்பை முடிவுக்குக் கொண்டு வந்தது.