05th October 2022 10:26:37 Hours
இந்தியாவில் உள்ள கொரியன் குடியரசின் தூதரகத்தின் இராணுவ இணைப்பாளர் தென் கொரியன் இராணுவத்தின் லெப்டினன் கேணல் ஹான், ஜோங் – ஹன் அவர்கள் இன்று (4) பிற்பகல் கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுரவி்ல் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சின் வளாகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் கொரியா இந்தியத் தூதரகத்தின் இராணுவத் இணைப்பாளர்களுக்குமிடையில் பொதுவான விடயங்கள் தொடர்பான கருத்துக்களைப் பரிமாறப்பட்டன. இதன்போது இரு நாடுகளிலும் ஆயுதப் படைகளின் உறுப்பினர்களுக்கும் இடையே நிலவும் நல்லெண்ணம், ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வின் பரஸ்பர உணர்வுகளையும் அவர்கள் நினைவு கூர்ந்தனர்.
சுமூகமான சந்திப்பின் முடிவில் இலங்கை இராணுவத்தின் நல்லெண்ணத்தை உறுதிப்படுத்தும் முகமாக லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் லெப்டினன் கேணல் ஹான், ஜொங் - ஹன் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.