26th March 2022 18:54:16 Hours
இந்தியாவின் நாகாலாந்தில் நடைபெற்ற ஆசிய க்ரோஸ் கன்ரி - சம்பியன்ஷிப் ஓட்டப் போட்டியில் 5 வது இலங்கைப் பீரங்கி படையணியின் சார்ஜன் ஆர்.எம்.எஸ் புஷ்பகுமார வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
அதேபோன்று, 3 போட்டியாளர்களை உள்ளடக்கிய போட்டிகளில் இலங்கை இராணுவ ஆண்கள் அணி போட்டியில் ஒட்டுமொத்தமாக இரண்டாம் இடத்தைப் பிடித்தது. மேலும் இராணுவத்தின் இரண்டு பெண் போட்டியாளர்கள் இந்தப் போட்டியின் போது ஒட்டுமொத்தமாக பெண்களுக்கான இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.
போட்டியில் கலந்து கொண்ட மற்ற போட்டியாளர்களின் பெயர்கள் இங்கே பின்வருமாறு;
இராண்டாம் இடம் (ஆண்)
5 வது இலங்கை பீரங்கி படையணி சார்ஜென் ஆர்.எம்.எஸ் புஷ்பகுமார
12 வது இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த பொம்பொடியர் கே.சம்முகேஸ்வரன்
19 வது கெமுனு ஹேவா படையணியின் கோப்ரல் பி.எம்.எஸ் விஜேகுமார
இராண்டாம் இடம் (பெண்)
11 வது இலங்கை சமிக்ஞை படையணியின் சிப்பாய் ஏ.எம்.என் நிதர்ஷனி
2 வது (தொ) இலங்கை இராணுவ பொதுச் சேவைப் படையணியின் சிப்பாய் எச்.எம்.சி.எஸ் ஹேரத்