Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th March 2022 21:53:10 Hours

அலுவலக கடமைகளிலிருந்து மேஜர் ஜெனரல் கீர்த்தி பண்டார விடுகை

இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெறவிருக்கும் 68வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி பண்டார அவர்களுக்கு சனிக்கிழமை (12) 68 வது படைப்பிரிவு தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாக பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

இராணுவத்தின் முன்னேற்றத்திற்காக சுமார் 34 வருட சேவையை நிறைவு செய்துள்ள மேற்படி அதிகாரிக்கு 6 வது கெமுனு ஹேவா படையணியின் சிப்பாய்களால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

அதனையடுத்து மேஜர் ஜெனரல் கீர்த்தி பண்டார அவர்களால் தலைமையக வளாகத்தில் மா மரக்கன்று ஒன்று நாட்டி வைக்கப்பட்டதோடு, சிப்பாய்களுடனான குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வின் பின்னர் சிப்பாய்களுக்கு ஆற்றிய உரையில் தனது சேவைக்காலத்தில் ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் நன்றி கூறினார். இதன்போது இராணுவத்திற்காக அவர் ஆற்றிய சேவையை பாராட்டும் வகையில் நினைவுச் சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் 681 , 682 வது பிரிகேட் தளபதிகள் அதன் கீழுள்ள கட்டளை அலகுகளினதும் கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் பங்கேற்றிருந்தனர்.