Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th October 2023 07:08:04 Hours

அம்பாறை போர் பயிற்சி பாடசாலையின் கற்பித்தல் முறைமை பாடநெறி எண்-69 நிறைவு

மூன்று வார கற்பித்தல் முறைமை பாடநெறி எண்-69 நிறைவானது 30 செப்டெம்பர் 2023 அன்று தொடங்கியதுடன் ஒரு மாதத்திற்குப் பின்னர் செவ்வாய்கிழமை ஒக்டோபர் 24 அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையில் முடிவடைந்தது.

இராணுவத்தில் உள்ள அனைத்து படையணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி பாடநெறியில் 181 சிப்பாய்கள் பங்குபற்றினர். இப் பாடநெறியில் 19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் சிப்பாய் எ.எம்.டி.எம் அழாகோன் தகுதி வரிசையில் முதலிடத்தை பெற்றுக்கொண்டார்.

அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் டி.ஆர்.என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை வழங்கியதுடன் நிறைவுரையை நிகழ்த்தினார்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பயிற்றுனர்களும் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.