04th December 2023 19:12:57 Hours
இராணுவத்தின் பல்வேறு படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 147 சிப்பாய்களின் பங்குபற்றலுடன் அம்பாறை போர் பயிற்சி கல்லூரியில் இடம்பெற்ற கற்பித்தல் முறைமை பாடநெறி இலக்கம்- 70 வெள்ளிக்கிழமை (டிசம்பர் 01) நிறைவு பெற்றது.
அம்பாறை போர் பயிற்சி கல்லூரியின் தளபதி பிரிகேடியர் டிஆர்என் ஹெட்டியாராச்சி ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிறைவுரை ஆற்றினார். ஒரு அரிதான நிகழ்வாக, மூன்று பெண் சிப்பாய்கள் பாடத்திட்டத்தில் தகுதியின் வரிசையில் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். போர் பயிற்சி கல்லூரியின் தலைமை பயிற்றுவிப்பாளர் லெப்டினன் கேணல் டப்ளியூ எம் எம் டப்ளியூ பி எச் ஜீ ஜீ பிட்டவல ஆர்எஸ்பீ யுஎஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பாடநெறியின் திறன் வெளிப்பாடுகள் பின்வருமாறு:
முதலாமிடம் - சிப்பாய் கே.டி.எச் குமாரி - இலங்கை இராணுவ மகளிர் படையணி
இரண்டாமிடம் - லான்ஸ் கோப்ரல் ஜி.டி வீரதுங்க - இலங்கை இராணுவ பொலிஸ் படையணி
மூன்றாமிடம் - சிப்பாய் வைஜீடி திலகரத்ன- இலங்கை இராணுவ மகளிர் படையணி