Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th April 2024 14:57:09 Hours

அம்பாறையில் அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் சிரேஷ்ட தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்தி பாடநெறி - 55' நிறைவு

அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் சிரேஷ்ட தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்தி பாடநெறி - 55' வெற்றிகரமாக முடிவடைந்ததுடன் சான்றிதழ் வழங்கும் விழா 10 ஏப்ரல் 2024 அன்று நடைபெற்றது.

இராணுவத்தின் பல்வேறு படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு மாத காலப் பாடநெறியில் மொத்தம் 85 சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் பங்குபற்றினர். 1 வது கெமாண்டோ படையணியின் லான்ஸ் கோப்ரல் டப்ளியூ ஏ மதுஷங்க அவர்கள் பாடநெறியின் சிறந்த மாணவன் என்ற பட்டத்தைப் பெற்றார்.

அம்பாறை போர் பயிற்சி பாடசாலை தளபதி பிரிகேடியர் டீஆர்என் ஹெட்டியாரச்சி ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் சான்றிதழ் வழங்கும் விழாவில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.