Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th April 2023 19:20:29 Hours

அமைதி உதவி நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் புத்தாண்டு கொண்டாட்டம்

குக்குலேகங்க இலங்கை அமைதி ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவனம் அதன் பாரம்பரிய சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழா கொண்டாட்டங்களை வெள்ளிக்கிழமை (21) அதன் பிரதான மைதானத்தில் நடாத்தியது. இதில் ஏராளமான அனைத்து நிலையினர்களும் கலந்து கொண்டனர்.

இலங்கை அமைதி ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதி பிரிகேடியர் சீஏ ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்களின் ஆசீர்வாதத்துடன், நாட்டில் நிலவும் உடல் நல பாதிப்புகள் மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்த சிறப்பு நிகழ்வு நடாத்தப்பட்டது. அன்றைய நிகழ்ச்சி பல சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பாரம்பரிய அம்சங்களை உள்ளடக்கியதுடன் மாலையில் ஒரு இசை நிகழ்ச்சி மூலம் வண்ணமயமாக்கப்பட்டது.

இலங்கை அமைதி ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதி பிரிகேடியர் சீஏ ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்கள் இந்நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகளும் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டனர்.