20th November 2023 20:33:05 Hours
ஹவாய் போர்ட் ஷாப்டரில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ பசுபிக் கட்டளை பிரதி தளபதி மேஜர் ஜெனரல் கிறிஸ் ஸ்மித், கொழும்பு அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு உதவியாளர் லெப்டினன் கேணல் அந்தோனி சி. நெல்சன் ஆகியோருடன் மேஜர் பெஞ்சமின் புளோரஸ், மேஜர் ஒமர் கவாலியர் மற்றும் கெப்டன் கெய்ட்லின் பென்னிகூக் ஆகியோர் இராணுவ பதில் பதவி நிலை பிரதானியும் போர் கருவி பணிப்பாளர் நாயகமுமான ஜிஆர்ஆர்பீ ஜயவர்தன ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்களை வியாழக்கிழமை (நவம்பர் 16) இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.
தொடர்ந்து நடந்த சுமூகமான உரையாடலின் போது, பயிற்சி விடயங்கள், தற்போதைய பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் இரு நிறுவனங்களுக்கும் பொதுவான ஏனைய விடயங்கள் குறித்து பதில் பதவி நிலை பிரதானியும் தூதுக்குழுவினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
கலந்துரையாடலின் நிறைவில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜி டபிள்யூ டபிள்யூ டபிள்யூ எம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ, தர நிர்ணய மற்றும் ஆய்வு பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் எம்சிஎஸ்கே சேனாரத்ன ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ அவர்களும் இந்த சுமுக சந்திப்பில் கலந்துகொண்டனர்.