27th August 2023 09:41:08 Hours
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் தூதுவர் அதிமேதகு ஜூலி சுங், பாதுகாப்பு இணைப்பாளர் லெப்டினன் கேணல் எட்டனி சி நெல்சன் மற்றும் உதவிப் பாதுகாப்பு ஆலோசகர் திரு. சேத் நெவின்ஸ் ஆகியோரின் வட மாகாணத்திற்கான விஜயத்தின் போது வியாழன் (ஓகஸ்ட் 24) அன்று கிளிநொச்சி 1 ஆம் படைத்தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.
1 ஆம் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பி அமுனுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் வருகை தந்த தூதுவரை வரவேற்றதுடன், சுமுகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
இந்த சுமூக சந்திப்பின் போது, 1 ஆம் படைத் தளபதி மற்றும் அதிமேதகு ஜூலி சுங் ஆகியோர் இடையே இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இருதரப்பு உறவுகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டதுடன், நல்லிணக்கம், மேம்பாடு, உதவி ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தினர். நல்லிணக்கம், மேம்பாடு, விவசாயத்திற்கான உதவி, பாதுகாப்பு மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தும் 1 ஆம் படையின் பணிகள் குறித்தும் விளக்கப்பட்டது.
1 ஆம் படைக்கு அதிமேதகு ஜூலி சுங் அவர்களின் வருகையை நினைவு கூறும் வகையில் விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் கையெழுத்திட்டதுடன், பாராட்டுச் நினைவுச் சின்னங்களும் பரிமாற்றிக் கொள்ளப்பட்டன.