10th November 2018 23:34:12 Hours
அம்பாரை நீர்பாசன பணிப்பகத்தின் பணிப்பாளரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 24ஆவது படைப் பிரிவின் 23ஆவூது இலங்கை சிங்கப் படையினரால் ஹட ஓயா லாகூகல மஹாவெவ நீர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள வெடிப்பை சீர்செய்யூம் நோக்கில் கடந்த வியாழக் கிழமை (08) படையினர் செயற்பட்டுள்ளனர்.
அந்த வகையில் கடும் மழை காரணமாக லாகூகல மஹாவெவ குளக்கட்டின் நீர் மட்டம் உயர்ந்து அதன் காணரமாக வெடிப்புக்கள் ஏற்பட்டு பாரிய சேதம் ஏற்படுவதை படையினர் உடனடியாக செயற்பட்டு சீர்செய்தனர். மேலும் இப் பணிக்கான கண்காணிப்பை கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சந்துசித பனன்வெல அவர்களின் தலைமையில் 24ஆவது படைத் தளபதியான மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்கள் மேற்கொண்டனர்.
அம்பாரை அனர்த்த முகாமைத்துவ மையத்தினர் 3ஆவது விஜயபாகு காலாட் படையினர் மற்றும் கடற் படையினர் இணைந்து பாதிக்கப்பட்ட 64குடும்பங்களிற்கு கல்முனை மற்றும் சாவலடி வீதியினுடாக பிரவேசிப்பதற்காக டிரெக்டர் மற்றும் படகுகள் போன்றன வழங்கப்பட்டுள்ன.
மேலும் இவ்வாறான பாரிய அனர்த்தங்களான வெள்ளநீரை கட்டுப்படுத்தும் நோக்கில் படையினர் அனர்த்த முகாமைத்துவத்தினருடன் இணைந்து பணியாற்றினர். Running sport media | Air Jordan 1 Hyper Royal 555088-402 Release Date - SBD