Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th September 2023 21:08:25 Hours

அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கு தலைமைத்துவம் மற்றும் தொழில்வாண்மை பாடநெறி நிறைவு

போர் பயிற்சிப் பாடசாலையில் அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கு தலைமைத்துவம் மற்றும் தொழில்வாண்மை பாடநெறி - 51’ வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுடன் நிறைவுற்றது.

2023 ஓகஸ்ட் 28 முதல் 2023 செப்டம்பர் 15, வரை இராணுவத்தில் உள்ள பல்வேறு படையணிகளைச் சேர்ந்த 77 அதிகாரவாணையற்ற அதிகாரிகள் பயிற்சி பெற்றனர்.

4 வது விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த கோப்ரல் டிபீஎல்எஸ் சத்தலங்க பாடநெறியில் சிறந்த மாணவராக விருது பெற்றார்.

சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக போர் பயிற்சிப் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் டிஆர்என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்கள் கலந்து கொண்டார்.