12th August 2023 18:10:41 Hours
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூ பீ ஏ டி டப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் வெள்ளிக்கிழமை (ஜூலை 28) பாரம்பரியமாக அனுராதபுரத்தில் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்கு வணக்கம் செலுத்தி மத ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக விஜயம் செய்தார்.
வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி முதலில் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஐஏஎன்பி பெரேரா ஆர்டபிள்யூபீ யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சீ மற்றும் இன்னும் சில சில சிரேஷ்ட அதிகாரிகளுடன் புனித ஜெயஸ்ரீ மஹாபோதியாவில் சமய வழிபாடுகளில் கலந்து கொண்டார்.
பின்னர், அவர் எட்டு புனித வழிபாட்டுத் தலங்களின் (அடமஸ்தானாதிபதி) பிரதம அதிபதியும் நுவரகலவிய பிரதம சங்க நாயக்கருமான வண.பல்லேகம ஹேமரதன நாயக்க தேரர் அவரது மடத்தில் சந்தித்து ஆசிகளை பெற்றுகொண்டார். சந்திப்பின் முடிவில், அவர் பல்லேகம ஹேமரத்தன நாயக்க தேரருக்கு 'பிரிகர' வழங்கியதுடன் அவரது மடாலயத்தில் அவரது ஆசிர்வாதத்தினை பெற்றுக்கொண்டார்.
சிறிது நேரத்தின் பின்னர், அனுராதபுரத்தில் உள்ள ருவன்வெலி மஹா சேயா, துபாராமய, லங்காராமய, அபயகிரிய, இசுருமுனிய, ஜயந்தி விகாரை, மிரிசவெட்டிய, மிஹிந்தலாய ஆகிய சமய ஸ்தலங்களுக்குச் சென்ற அவர், அவ் விகாரைகளில் உள்ள பிரதம தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார்.
இந்த விஜயத்தின் போது வன்னி தளபதியுடன் 21 வது காலாட் படைப் பிரிவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இணைந்திருந்தனர்.