2021-05-02 15:23:26
பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (29) கொவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு குட்டம் மாவட்டச் செயலாளர் திரு. டபிள்யூ.ஏ தர்மசிறி மற்றும் கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதியும் மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியுமான மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய ஆகியோரின் பங்குப்பற்றலில் இடம்பெற்றது.
2021-04-30 18:56:15
ஐ.நா. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர்களுடன் இணைந்து தென் சூடானின் போர் நகர பகுதியில் உள்ள ஸ்ரீமேட் நிலை II மருத்துவமனையில் சேவையாற்றும் இலங்கை அமைதி காக்கும் படையினர் சமீபத்தில் சுற்றுச்சூழல் நட்பு திட்டங்களின் கீழ் தென் சூடான் ஐக்கிய...
2021-04-30 18:50:20
சமூகம் சார்ந்த திட்டங்களின் ஒரு பகுதியாக 68 வது படைப்பிரிவு தலைமையகத்தின் 682வது பிரிகேட்டின் 18வது விஜயபாகு காலாட்படை படையினர் ஆசிரியர்கள் மற்றும் சில பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் ஞாயிற்றுக்கிழமை (25) தேவிபுரம் மத்திய கல்லூரி வளாகத்தை சுத்தம் செய்தனர்.
2021-04-30 18:50:02
கிழக்கு பக்மீகம துசிதபுரவில் வசிக்கும் ஒரு ஏழைக் குடும்பத்திற்கு புதிய வீட்டைக் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா சுகாதார முறைகளுக்கு அமைவாக வியாழக்கிழமை (22) இடம்பெற்றது. 22 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா மற்றும் 221 வது பிரிகேட் தளபதி...
2021-04-30 18:50:00
முழங்காவில் பட்டாலியன் பயிற்சி பாடசாலையின் ஆட்சேர்ப்பு பயிற்சி பாடநெறி செவ்வாய்க்கிழமை (27) சுருக்கமான விழாவின் ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்டது, நிகழ்வின் பிரதம அதிதியாக 651 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் வசந்த பண்டார பிரதம விருந்தினராக கலந்துக் கொண்டு தொடக்க உரையினை நிகழ்த்தினார்.
2021-04-30 18:49:24
கொவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்பு மாநாடு செவ்வாய்க்கிழமை (27) தம்புள்ள பிரதேச செயலக அலுவலகத்தில் 53 வது படைப்பிரிவு தளபதியும் மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியுமான மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே பங்குபற்றலில் நடைபெற்றது.
2021-04-30 18:48:08
இன்று காலை (1) நிலவரப்படி, கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 1662 நபர்களுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 29 வெளிநாட்டிலிருந்து வந்தவர்களும் எஞ்சிய 1636 பேர் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்கள ஆவர். இதில் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த 329 பேரும், கொழும்பிலிருந்து 317 பேரும், கம்பாஹா மாவட்டத்தைச் சேர்ந்த 193 பேரும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த 797 பேரும் அடங்குவர் என கொவிட் பரவரலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் கூறுகிறது.
2021-04-30 18:46:33
இன்று காலை (30) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1531 நபர்களுக்கு கொவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 40 பேர் வெளிநாட்டிலிருந்நு வருகை தந்த இலங்கையர் ஆவர். எஞ்சிய 1491 பேர் உள்நாட்டில் அடையாளம் இனங்காணப்பட்டவர்கள். இதில் பெரும்பாலானவர்கள் 533 கொழும்பு...
2021-04-29 22:22:54
வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார மற்றும் 56 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன துனுவில ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் 562 வது பிரிகேட் படையினர் வவுனியா நகரின் பொது இடங்களில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கிருமிநாசினி தெளிக்கும் திட்டத்தை திங்கட்கிழமை (26) மேற்கொண்டனர்.
2021-04-29 16:21:53
யாழ்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 51 வது படைப்பிரிவு படையினர் டெங்கு, நோய்த்தொற்றுகள் மற்றும் சாலை விபத்துகளைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக திருநெல்வேலியில் இருந்து நாவற்குழி வரையிலான சாலையோரங்களை துப்பரவு செய்யும் பணிகளில் திங்கட்கிழமை (26) மேற்கொண்டனர்.