Header

Sri Lanka Army

Defender of the Nation

30th April 2021 18:49:24 Hours

கொவிட்-19 தொற்றுநோய்ல் மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்பு மாநாடு

கொவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்பு மாநாடு செவ்வாய்க்கிழமை (27) தம்புள்ள பிரதேச செயலக அலுவலகத்தில் 53 வது படைப்பிரிவு தளபதியும் மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியுமான மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே பங்குபற்றலில் நடைபெற்றது.

மாத்தளை மாவட்டத்தில் கொவிட் -19 தொற்றாளர்களின் திடீரென அதிகரிப்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ. பிரமித பண்டார மற்றும் பிற பங்குதாரர்களுடன் நீண்ட கலந்துரையாடினார். தடுப்பூசி வழங்கல் நிலை, தொற்றுநோய் பரவுவதற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள், சமூகத்தில் பாதிப்பு, விழிப்புணர்வு திட்டங்களை நடத்துதல், பி.சி.ஆர் / ஆன்டிஜென் பரிசோதனைகளை நடத்துவதன் முன்னேற்றம் மற்றும் வைரஸ் பரவுவதைக் குறைக்க சரியான வழிமுறையை செயல்படுத்த வேண்டிய அவசியம் தொடர்பாக பொலிஸ், அரச மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு மாநாட்டின் போது விவாதிக்கப்பட்டது.