29th April 2021 22:22:54 Hours
வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார மற்றும் 56 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன துனுவில ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் 562 வது பிரிகேட் படையினர் வவுனியா நகரின் பொது இடங்களில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கிருமிநாசினி தெளிக்கும் திட்டத்தை திங்கட்கிழமை (26) மேற்கொண்டனர்.
அதன்படி 562 வது பிரிகேட்டின் 17 (தொ) இலங்கை சிங்கப் படையினர் வவுனியா நகரப் பகுதியின் பஸ் தரிப்பிடம், ரயில் நிலையம், நலன்புரி மையங்கள், அரசு மற்றும் தனியார் வங்கிகள், சந்தைகள், பொது மக்கள் கூடும் இடங்கள் மற்றும் முச்சக்கர வண்டி தரிப்பிடம் தொற்று நீக்கம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தை 562 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஏ.எம்.எஸ். பிரேமவன்ச அவர்களால் மேற்பார்வை செய்யப்பட்டது.
இத்திட்டத்திற்கு வவுனியா பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நகர சபை அதிகாரிகளும் பங்களிப்பு செய்தனர்.