செய்தி சிறப்பம்சங்கள்

ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சின் சர்வதேச இராணுவ ஒத்துழைப்புக்கான முதன்மை பணிப்பகத்தின் பிரதி தலைவர் மேஜர் ஜெனரல் அலெக்சாண்டர் இவனோவிச் ஜின்சென்கோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், உயர்மட்ட ரஷ்ய இராணுவக் குழுவினர் பதவி நிலை பிரதானி அலுவலகத்தில் நடைபெற்ற செயல் திட்ட மாநாட்டில் பங்கேற்றனர்.


இலங்கைக்கான மியன்மார் தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளரான பிரிகேடியர் ஜெனரல் சாவ் மோ எல்வின் அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப் – என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2025 ஜனவரி 28 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, மேஜர் ஜெனரல் பி.ஐ அஸ்ஸலராட்சி யூஎஸ்பீ பீஎஸ்சி பீடீஎஸ்சீ அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன் 2025 ஜனவரி 28 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


இலங்கை இராணுவத்தின் சமீபத்தில் நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்கள், 2025 ஜனவரி 27அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப் என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.


பாதுகாப்பு சேவைகள் எல்லே விளையாட்டு போட்டி 2025 இல் இராணுவ எல்லே அணி வெற்றி பெற்று, தொடர்ந்து நான்காவது ஆண்டாக சாம்பியன்ஷிப்பைப் பெற்றுள்ளது.


இராணுவ தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பதில் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், "தூய இலங்கை" திட்டத்தின் ஒரு பகுதியாக, 2025 ஜனவரி 21 அன்று ரெண்டெஸ்வேவ்ஸ் மைதானத்தில் பாரம்பரிய இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


32 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டிற்காக சேவை செய்த இலங்கை சிங்க படையணியின் மறைந்த பிரிகேடியர் என்.ஜீ.ஜீ.எஸ் திலகரத்ன (ஓய்வு) அவர்களின் இராணுவ இறுதி மரியாதை திங்கட்கிழமை (ஜனவரி 20) பிற்பகல் மஹாயாவ மயானத்தில் நடைபெற்றது.


இலங்கை இராணுவம், இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கான மருத்துவ முகாமை ஏற்பாடுசெய்துள்ளது. அதற்கமைய இதன் திட்டத்தின் மூலம் படைவீரர்களின் நல்வாழ்வுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது. கொழும்பு மாகாணத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள படைவீரர்களுக்கான சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக, இம் முயற்சி 2025 ஜனவரி 20 முதல் 24 வரை ராகம, ரணவிரு செவனவில், நடைபெற உள்ளது.


இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜனவரி 20 ஆம் திகதி மத்தேகொட சப்பர்ஸ் இல்லத்தில் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளுக்கு உரையாற்றினார்.


இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பதில் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜனவரி 16 ம் திகதி 5 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, 2 வது (தொ இலங்கை சிங்க படையணி, 4 வது (தொ) இலங்கை இராணுவ போர்கருவி படையணி மற்றும் 1 வது இலங்கை ரைபிள் படையணி ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்டார்.