
16வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழு, லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட உள்ளது. கஜபா படையணியின் அணிவகுப்பு மைதானத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களுக்கு, அவர்கள் 2025 மார்ச் 22 ஆம் திகதி சம்பிரதாயங்களுக்கமைய மரியாதை செலுத்தினர்.