செய்தி சிறப்பம்சங்கள்
நிலை உயர்வுபெற்ற புதிய மேஜர் ஜெனரலுக்கு இராணுவத் தளபதி வாழ்த்து
அண்மையில் மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம்.கே.டி.பீ. மாபலகம பீஎஸ்சீ அவர்கள் 2026 மே 29 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு சம்பிரதாய சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகாரச் சின்னங்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டார்.
இலங்கை இராணுவ தொண்டர் படையணியில் நடைபெற்ற கல்வி உதவிப் பொருட்கள் நன்கொடை திட்டத்தில் இராணுவ தளபதி பங்கேற்பு
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்கவும், இராணுவப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனையும் நல்வாழ்வையும் தொடர்ச்சியாக மேம்படுத்தும் நோக்கிலும், இலங்கை இராணுவ தொண்டர் படையணி 2026 மே 28 அன்று கொழும்பில் உள்ள கிராண்ட் மெய்ட்லண்டில் கல்வி உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் இராணுவத் தளபதி பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
Outgoing Chief of Staff Receives Military Honours
The Sri Lanka Army bade farewell to Major General B. M. Yahampath RWP RSP ndu psc, Chief of Staff (COS) of the Army, on 27 May 2026 at a formal military ceremony.
ஓய்வுபெறும் இராணுவ பதவி நிலை பிரதானியின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
மேஜர் ஜெனரல் பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, 36 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 மே 27 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
தூய இலங்கை திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம்
நாட்டில் அடையாளம் காணப்பட்ட 253 கடற்கரைகளைத் தூய்மைப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள 30 கடற்கரைப் பகுதிகளை உள்ளடக்கி, “நமது கடற்கரைகளைப் பாதுகாக்கவும், கடல்வாழ் உயிரினங்களைப் பேணவும், தூய்மையான, பசுமையான எதிர்காலத்தை உருவாக்கவும்!” என்ற கருப்பொருளின் தூய இலங்கை திட்டத்தின் கீழ் கடற்கரைத் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியை யாழ் பாதுகாப்பு படை தலைமையகம் முன்னெடுத்தது.
இராணுவ தளபதி வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு விஜயம்
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2026 மே 24 அன்று வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
இராணுவ தளபதி அபிமன்சல 3 போர்வீரர்கள் நலவிடுதிக்கு விஜயம்
தேசிய போர் வீரர்கள் தினத்தை முன்னிட்டு, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2026 மே 22 அன்று பாங்கொல்லை உள்ள அபிமன்சல 3 நலவிடுதிக்கு விஜயம் மேற்கொண்டார்.
இலங்கை இராணுவம் உஸ்மென் உஸ்மக் – விருதரு செவன நடுகை திட்டம் ஆரம்பிப்பு
நாட்டின் சுதந்திரத்திற்காகத் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த போர் வீரர்களுக்கும், 'தித்வா' சூறாவளியினால் உயிரிழந்த இலங்கை குடிமக்களுக்கும் அஞ்சலியாகவும், அதனால் ஏற்பட்ட பெரும் சுற்றுச்சூழல் சேதத்தைச் சீரமைத்து, அதன் மூலம் 'தூய இலங்கை' தேசிய திட்டத்தின் நோக்கங்களை அர்த்தமுள்ள வகையில் அடைவதற்காகவும், இராணுவத்தின் “உஸ்மென் உஸ்மக் – விருதரு செவன ” என்ற மரம் நடுகை திட்டம், இலங்கை இராணுவத்தின் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள பல மாவட்டங்களில், அவர்களின் நெருங்கிய உறவினர்களின் பங்கேற்புடன், இமாதம் 22ஆம் திகதி முதல் ஜூன் 04ஆம் திகதி வரை செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இராணுவ தளபதியினால் விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தில் மருத்துவ சிகிச்சை மையம் திறந்து வைப்பு
Lieutenant General Lasantha Rodrigo RSP ndu psc IG, Commander of the Army, officially inaugurated the newly constructed Medical Clinic Centre at the premises of the Vijayabahu Infantry Regiment (VIR) in Boyagane on 22 May 2026, coinciding with National War Heroes’ Day.
இலங்கை இராணுவமும் அமெரிக்க இராணுவ பசுபிக் கட்டளையகமும் இருதரப்பு பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளை நடாத்தல்
ஐக்கிய அமெரிக்க இராணுவ பசுபிக் கட்டளையகத்தைச் சேர்ந்த தூதுக்குழுவின் பிரதித் தூதரகப் பொறுப்பாளர் திருமதி ஜேன் ஹோவெல் மற்றும் ஐக்கிய அமெரிக்க இராணுவ பசுபிக் கட்டளையகத்தின் வியூகம் மற்றும் திட்டங்களுக்கான பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் கில்ஸ் ஜே.எஸ். கொர்னேலியா ஆகியோர் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புக்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு 2026 மே 21 அன்று இராணுவத் தலைமையகத்திற்கு வருகை தந்துடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர். அமெரிக்க இராணுவ பசுபிக் கட்டளைப் பிரிவுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையிலான இந்தக் கலந்துரையாடல் வரலாற்றில் முதன்முறையாக நடைபெற்றது.