சிவில் பணிகள்
77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுதும் கடற்கரை மற்றும் சாலை சுத்தம் செய்யும் திட்டங்கள்
77வது தேசிய சுதந்திரக் கொண்டாட்டங்களுக்கு இணங்க, "தூய இலங்கை" திட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் கடற்கரை மற்றும் சாலை சுத்தம் செய்யும் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
212 வது காலாட் பிரிகேட்டின் ஒத்துழைப்புடன் ‘தூய இலங்கை’ திட்டத்தின் தூய்மைபடுத்தும் பணிகள்
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் மேற்பார்வையில் 212 வது காலாட் பிரிகேட் படையினரால் 2025 பெப்ரவரி 17, அன்று “தூய இலங்கை திட்டத்திற்கமைய தூய்மைபடுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
கிழக்கு பாதுகாப்புப் படையினரால் சிவில் சமூகத்திற்கான நீர் சுத்திகரிப்பு நிலையம்
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 3 வது இலங்கை இராணுவ போர் கருவி படையணி படையினர் 2025 பெப்ரவரி 11 அன்று பரகும் கிராமத்தில் குடிநீர் வழங்கல் திட்டத்தை திரு. மங்கள பீரிஸ் அவர்களின் நிதி உதவியுடன் நிறுவினர். இத்திட்டம் சமூகத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான குடிநீரை வழங்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது.
கிழக்கு பாதுகாப்புப் படைத் படையினரால் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம்
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினர் 2025 பெப்ரவரி 16 அன்று "நமது கரைகளைப் பாதுகாத்தல், கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாத்தல் மற்றும் தூய்மையான மற்றும் பசுமையான எதிர்காலத்தை உருவாக்குதல்" என்ற கருப்பொருளின் கீழ் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தை முன்னெடுத்தனர்.
144 வது காலாட் பிரிகேட்டினரால் சிரமதான பணி
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 144 வது காலாட் பிரிகேட், அரசாங்கத்தின் தூய இலங்கை திட்டத்தின் ஒரு பகுதியாக, 2025 பெப்ரவரி 15 அன்று ஒரு பெரிய அளவில் சிரமதான பணியை முன்னெடுத்தனர். இந்த திட்டம் பொல்துவ சாலை, பாராளுமன்ற சாலை, இலங்கை-ஜப்பான் நட்புறவு சாலை, துருமித்திரு திட்டப் பகுதி மற்றும் தியவன்னா ஏரி போன்ற முக்கிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன.
தூய இலங்கை திட்டத்திற்கு இணங்க 7 (தொ) இலங்கை கவச வாகன படையணியினால் சிரமதான திட்டம்
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், தேசிய தூய இலங்கை திட்டத்துடன் இணைந்து, வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், 212 வது காலாட் பிரிகேட்டின் 7 (தொ) இலங்கை கவச வாகனப் படையணியின் படையினர் 2025 பெப்ரவரி 15 அன்று அவுகனை பழைய விகாரையில் சிரமதானப் பணியை மேற்கொண்டனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு 51 வது காலாட் படைப்பிரிவின் படையினர் முதியோர் மற்றும் சிறுவர்களுக்கு உதவி
77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்பீஎன்ஏ முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 பெப்ரவரி 04, அன்று புனித தெரேசா முதியோர் இல்லத்தில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.
12 வது காலாட் படைப்பிரிவினரால் கடற்கரை தூய்மைபடுத்தும் திட்டம்
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 12 வது காலாட் படைப்பிரிவினரால், “தூய இலங்கை திட்டத்தின்” ஒரு பகுதியாக, 2025 பெப்ரவரி 09, அன்று கடற்கரையில் சுத்தம் செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஹம்பாந்தோட்டை அரசாங்க அதிகாரிகளின் நெருக்கமான ஒருங்கிணைப்பில் ஹம்பாந்தோட்டை முதல் தங்காலை வரையிலான கடலோரப் பகுதியை உள்ளடக்கி இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
212 வது காலாட் பிரிகேடினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் திட்டம்
77 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, 212 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பி.ஏ.எம்.பீ. பாலசூரிய ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கெக்கிராவ, கிரி மெட்டியாவ காமினி வித்தியாலயத்தில், பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை பைகள், காலணிகள், புத்தகங்கள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி 2025 பெப்ரவரி 04 அன்று நடைபெற்றது.
புனானி படையலகு பயிற்சி பாடசாலை மற்றும் 7 வது இலேசாயுத இலங்கை பீரங்கிப் படையணி இணைந்து சிரமதானம்
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் 'தூய இலங்கை' திட்டத்தின் கீழ், புனானி படையலகு பயிற்சிப் பாடசாலை மற்றும் 7 வது இலேசாயுத இலங்கை பீரங்கிப் படையணி ஆகியவை சுதந்திர தினத்தை முன்னிட்டு 2025 பெப்ரவரி 04 அன்று ஒரு துய்மையாக்கும் திட்டத்தை மேற்கொண்டன.