சிவில் பணிகள்
542 வது காலாட் பிரிகேடினால் ‘தூய இலங்கை’ திட்டத்திற்கு உதவி
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 542 வது காலாட் பிரிகேட் படையினர், அப்பகுதியில் உள்ள பொதுமக்களுடன் இணைந்து, ‘தூய இலங்கை’ திட்டத்தின் ஒரு பகுதியாக, மாந்தோட்டம் கட்டுக்கரைகுளத்தை இணைக்கும் நீர்ப்பாசன கால்வாயினை சுத்தம் செய்யும் திட்டத்தை 2025 மே 25 ஆம் திகதி மேற்கொண்டனர்.
9 வது கஜபா படையணியினால் நன்கொடை திட்டம் ஏற்பாடு
9 வது கஜபா படையணியின் படையினர் 2025 மே 26 ஆம் திகதி 9 வது கஜபா படையணியில் நன்கொடை திட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
2 வது கஜபா படையணியினால் உலர் உணவு மற்றும் மதிய உணவு பொதிகள் நன்கொடை திட்டம்
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 22 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் மேற்பார்வையின் கீழ் 2 வது கஜபா படையணி, உலர் உணவு மற்றும் மதிய உணவு பொதிகள் வழங்கும் நன்கொடை திட்டத்தை நடாத்தியது.
211 மற்றும் 543 வது காலாட் பிரிகேட் படையினரால் இரத்த தானம்
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 21வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், 211வது காலாட் பிரிகேட், 9வது கஜபா படையணி மற்றும் 5வது (தொ) கஜபா படையணி படையினர், 2025 ஜூன் 07 அன்று பதவிய மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வின் போது தானாக முன்வந்து இரத்த தானம் செய்தனர். கொழும்பு ரோயல் கல்லூரி செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து, அவர்களின் 46 வது வருடாந்த இரத்த தான நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த முயற்சியை முன்னெடுத்தனர்.
23 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் முகமாலையில் நன்கொடை மற்றும் கண்ணிவெடி அகற்றும் விழிப்புணர்வு திட்டம்
23 வது கெமுனு ஹேவா படையணி படையினர் 2025 ஜூன் 14 ம் திகதி முகமாலை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் பிள்ளைகளுக்கு நன்கொடை மற்றும் கண்ணிவெடி அகற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
12 வது காலாட் படைப் பிரிவு படையினரால் இரத்த தானம்
ஹம்பாந்தோட்டை சிரிபோபுர பௌத்த காருண்ய நிவாரண “ட்சு சீ” அறக்கட்டளையால் 2025 ஏப்ரல் 29 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வில் 12 வது காலாட் படை பிரிவின் படையினர் பங்கேற்றனர்.
4வது கெமுனு ஹேவா படையணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தானம்
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், பொதுமக்களின் நல்வாழ்வை முன்னிலை படுத்தும் நிமித்தம் "தூய இலங்கை" திட்டத்திற்கு இணங்க, 232 வது காலாட் பிரிகேட்டின் 4வது கெமுனு ஹேவா படையணியினரால் 2025 ஏப்ரல் 5 அன்று உன்னச்சிவிய பகுதியில் இரத்த தான திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இத் திட்டத்தின் நோக்கம் அப்பகுதியின் இரத்த பற்றா குறையை நிவர்த்தி செய்வதாகும்.
9 வது இலங்கை பீரங்கி படையணி படையினரால் சிவில் சமூகத்திற்கான நீர் சுத்திகரிப்பு நிலையம்
233 வது காலாட் பிரிகேடின் 9 வது இலங்கை பீரங்கி படையணி படையினர், சமீபத்தில் மகாசென்புர கிராமத்தில் நீர் வழங்கல் திட்டத்தை நிறுவினர்.
அனுராதபுரம் ரயில் நிலையத்தில் "தூய இலங்கை" திட்டத்திற்கு படையினரின் ஆதரவு
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் மற்றும் "தூய இலங்கை" திட்டத்திற்கு அமைய 4வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி மற்றும் 2வது பொறியியல் சேவைகள் படையணி படையினர் 2025 மார்ச் 26 முதல் 2025 மார்ச் 30 வரை அனுராதபுரம் ரயில் நிலையத்தில் புதுப்பித்தல் மற்றும் தூய்மைபடுத்தும் திட்டத்தை முன்னெடுத்தனர்.
54 வது காலாட் படைப்பிரிவினால் வெற்றிகரமான நாய் தடுப்பூசி மற்றும் கருத்தடை திட்டம்
பிரிட்ஜிங் லங்கா மற்றும் கால்நடை பங்குதார்களான "வெட்ஸ் பார் பியூச்சர்" ஆகியவற்றுடன் இணைந்து, 54வது காலாட் படைப்பிரிவினரால், 2025 மார்ச் 24, முதல் 2025 ஏப்ரல் 6, வரை நாய்களுக்கு தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்யும் திட்டம் நடத்தப்பட்டது.