சிவில் பணிகள்
241 மற்றும் 243 வது காலாட் பிரிகேடினால் நன்கொடை திட்டம்
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 241 மற்றும் 243 வது காலாட் பிரிகேட் தளபதிகளின் மேற்பார்வையின் கீழ், 2025 பெப்ரவரி 04, அன்று அக்கரைப்பற்று மற்றும் அருகம்புலியில் உள்ள சிறுவர் இல்லங்களுக்கு மதிய உணவு மற்றும் பரிசில்கள் வழங்கும் நன்கொடை திட்டத்தை படையினர் முன்னெடுத்தனர்.
கதிரவேலியிலுள்ள திலகவதி சிறுவர் இல்லத்திற்கு 7வது கெமுனு ஹேவா படையணியினால் மதிய உணவு
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மற்றும் 7 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ், 77வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், 2025 பெப்ரவரி 04 அன்று கதிரவேலியில் உள்ள திலகவதி சிறுவர் இல்லத்தின் சிறார்களுக்கு 7 வது கெமுனு ஹேவா படையணி படையினர் மதிய உணவை வழங்கினர்.
242 வது காலாட் பிரிகேட் மற்றும் 8வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியினரால் மெதடிஸ்ட் சிறுவர் இல்லத்திற்கு உதவி
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் அறிவுறுத்தலின் கீழ், 242 வது காலாட் பிரிகேட் மற்றும் 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர், 2025 பெப்ரவரி 4ம் திகதியன்று திருக்கோவில் மெதடிஸ்ட் சிறுவர் இல்லத்திற்கு மதிய உணவு மற்றும் பாடசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கினர்.
கிளிநொச்சி 55 வது காலாட் படைப்பிரிவு படையினரால் சிறுவர் பூங்கா நிர்மாணிப்பு
55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பி.ஜி.எஸ். பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 55 வது காலாட் படைப்பிரிவின் படையினர் கிளிநொச்சி பிரதேச சிறுவர்களின் மகிழ்ச்சி மற்றும் திறமைக்காக 'சிறுவர் பூங்கா' ஒன்றை நிர்மாணித்தனர்.
6 வது பீரங்கி படையணி மற்றும் 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியினரால் அத்தனகல்லவில் சமூகநல திட்டம்
14 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் 141 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 6 வது பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் என்சீ கருணாரத்ன ஆர்எஸ்பீ யூஸ்பீ பீஎஸ்சீ மற்றும் 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் வைடிஎன் டி சில்வா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ ஆகியோரின் மேற்பார்வையின் கீழ், அத்தனகல்ல "செவன" முதியோர் இல்லம் மற்றும் "இசுரு" சிறுவர் இல்லத்தில் வசிப்பவர்களுக்கான சமூக நலத் திட்டங்கள் 2025 பெப்ரவரி 04ம் திகதி படையினரால் முன்னெடுக்கப்பட்டன.
232 வது காலாட் பிரிகேடினால் நன்கொடைத் திட்டம்
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசி பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 232 வது காலாட் பிரிகேட் தளபதியின் அறிவுறுத்தலின் கீழ், 232 வது காலாட் பிரிகேட் படையினர் 2025 பெப்ரவரி 04 அன்று மதிய உணவு பொதி மற்றும் யோர்கட் வழங்கும் திட்டத்தை மேற்கொண்டனர்.
காட்டு யானைகளிடமிருந்து சேதத்தைத் தடுக்கும் முயற்சியில் கிழக்கு பாதுகாப்புப் படையினர்
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ மற்றும் கிழக்கு பாதுகாப்புப் படையின் திட்ட அதிகாரி பிரிகேடியர் டபிள்யூ.எஸ்.ஆர். குமார யூஎஸ்பீ ஐஎஸ்சீ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், 12 வது கெமுனு ஹேவா படையணி, வனவிலங்கு பாதுகாப்புத் துறை (பிம்புரத்தேவ வனவிலங்கு அலுவலகம்) மற்றும் மகாவலி அதிகாரிகள் இணைந்து 21 காட்டு யானைகளை வீரலந்த குளத்திலிருந்து மதுரு ஓயா தேசிய பூங்காவிற்கு 2025 பெப்ரவரி 1 ஆம் திகதி இடமாற்றம் செய்தனர்.
கிழக்கு படையினரால் பொலன்னறுவை பெரகும் முதியோர் மற்றும் சிறுவர் இல்லத்திற்கு மதிய உணவு மற்றும் பாடசாலை உபகரணம்
77வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, கிழக்கு பாதுகாப்புப் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 பெப்ரவரி 4ம் திகதி பொலன்னறுவை பெரகும் முதியோர் மற்றும் சிறுவர் இல்லத்திற்கு மதிய உணவு மற்றும் பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கும் திட்டத்தை படையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
8 வது இலங்கை சிங்க படையணியினால் மரக்கன்று நடும் திட்டம்
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், "தூய இலங்கை" திட்டம் மற்றும் தாய்நாட்டை அழகுபடுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுடன் இணைந்து, 8 வது இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரி 2025 ஜனவரி 30 ஆம் திகதி பின்னவல யானைகள் சரணாலய வளாகத்தில் மரக்கன்று நடும் திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் குருநாகல் புகையிரத நிலையத்தில் தூய்மையாக்கல் பணி
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், வடமேற்கு மாகாண ஆளுநரின் ஒருங்கிணைப்பின் கீழ், இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் 2025 ஜனவரி 28 ஆம் திகதி குருநாகல் புகையிரத நிலையத்தில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர். “தூய இலங்கை” திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியை, கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி, இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படைத் தளபதி மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் நிலைய தளபதி ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.