ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் 2026 ஆம் ஆண்டின் முதல் பணி நாள் சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கொண்டாடப்பட்டது.
Defender of the Nation
ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் 2026 ஆம் ஆண்டின் முதல் பணி நாள் சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கொண்டாடப்பட்டது.
தியத்தலாவை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் 100 வது விடுகை அணிவகுப்பு நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அழைப்பின் பேரில் அதிமேதகு ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். தியத்தலாவை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி 2025 டிசம்பர் 21 அன்று 240 பயிலிளவல் அதிகாரிகளை பரிசளித்து இலங்கை அன்னையை கௌரவித்தது.
பாடநெறி இல.93, 94பி, குறுகிய கால பாடநெறி இல 21 சீ மற்றும் குறுகிய கால பாடநெறி இல 23, பெண் பாடநெறி 20, 62 (தொ) மற்றும் பெண் (தொ) பாடநெறி 19 ஆகியவற்றின் பயிலிவளல் அதிகாரிகளின் கல்வி மற்றும் இராணுவப் பயிற்சியின் உச்சக்கட்டத்தைக் குறிக்கும் இறுதி விளக்கக்காட்சி 2025 டிசம்பர் 20 அன்று இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் நடைபெற்றது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 16 டிசம்பர் 2024 அன்று தாமரை தாடக திரையரங்கில் நடைபெற்ற பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் பாடநெறி எண்-19 இன் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிறந்திருக்கும் 2026 ஆம் ஆண்டு இராணுவத்தின் அனைவருக்கும் அதிஷ்டம் மற்றும் செழிப்பு மிக்க ஆண்டாக அமைய தனது அன்பான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றார்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் அனைத்து நிலையினருடன் இணைந்து அனைவருக்கும் நத்தார் மற்றும் பண்டிகைகால வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றார். இப்பண்டிகை மகிழ்ச்சி மற்றும் பூரண ஆசிர்வாதங்களை கொண்டுவரட்டும்!
தற்போது நிலவும் சீரற்ற வானிலை நிலைமைகளுக்கு தேசிய அளவிலான மீட்பு நடவடிக்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று இரவு இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது.
81 வது ஆயுதப் படைகளின் நினைவு தினம் மற்றும் பொப்பி மலர் தின விழா இன்று (நவம்பர் 16) கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் உள்ள போர்வீரர் நினைவுத்தூபியில் நடைபெற்றது. இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கம் ஆயுதப்படைகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த இந்த வருடாந்த நிகழ்வு, முதலாம் உலகப் போர் முதல் இன்று வரையிலான யுத்தங்களில் தேசத்தைப் பாதுகாப்பதற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த இலங்கை போர் வீரர்களின் நினைவு மற்றும் தியாகங்களை கௌரவிக்கும் வகையில் நடாத்தப்பட்டது.
தேசிய பாதுகாப்பு கல்லூரியால் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ, 2025 நவம்பர் 05, அன்று "தேசிய பாதுகாப்பில் இலங்கை இராணுவத்தின் பங்கு" என்ற கருப்பொருளில் தளபதியின் சொற்பொழிவை நிகழ்த்த அழைக்கப்பட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் படை பங்களிப்பு நாடுகளின் தலைவர்களுக்கான மாநாடு 2025, இந்தியா புதுதில்லியில் 2025 ஒக்டோபர் 14 முதல் 16 ஆம் திகதி வரை இந்தியா இராணுவத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.