26th February 2024 12:06:29 Hours
இயந்திரவியற் காலாட் படையணி தனது 17 வது ஆண்டு நிறைவினை இராணுவ மற்றும் சமய நிகழ்ச்சிகளுடன் 2024 பெப்ரவரி 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் தம்புள்ளை ஹல்மில்லவெவ இயந்திரவியற் காலாட் படையணி தலைமையகத்தில் அதன் படைத்தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் தலைமையில் கொண்டாடியது.
ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இயந்திரவியற் காலாட் படையணி படையினரின் நலனுக்காக இரவு முழுவதும் பிரித் பாராயணம் மற்றும் மகா சங்கத்தினருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இயந்திரவியற் காலாட் படையணி படைத்தளபதிக்கு இயந்திரவியற் காலாட் படையணி படையினரால் ஆண்டுவிழா நாளில் முகாம் வளாகத்தின் நுழைவாயிலில் முறையான பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இயந்திரவியற் காலாட் படையணி படைத்தளபதி போர் வீரர்களின் நினைவு தூபியில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அதைத் தொடர்ந்து வழக்கமான சம்பிரதாய அணிவகுப்பு நடைபெற்றது.
தொடர்ந்து படையணியின் படைத்தளபதி படையினருக்கு உரையாற்றியதுடன் படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார். அதனை தொடர்ந்து அனைத்து நிலையினருடனான மதிய விருந்துபசாரத்திலும் தளபதி கலந்துகொண்டார்.
இயந்திரவியற் காலாட் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் மற்றும் இயந்திரவியற் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.