22nd February 2024 17:45:32 Hours
தற்போது நடைபெற்று வரும் வீட்டுத் திட்டத்தைவிரிவுபடுத்தும் வகையில், கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயூபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி ஐஜி மற்றும் இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நயோமி ரணவீர ஆகியோர் இணைந்து 3 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் தகுதியான அதிகாரவாணையற்ற அதிகாரிக்கு நிர்மாணித்து வெலிகந்தாவில் நடைபெற்ற திறப்பு விழாவில் அவரிடம் கையளித்தனர்.
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரி வேலையில்லாத கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சொந்த வீடு இல்லாமல் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகின்றார். அவர்களின் அவலநிலையைப் போக்குவதற்கு கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் வேண்டுகோளிற்கு இணங்க திரு.கெங்கசுதன் மயில்வாகனம் அவர்களினால் 1.2 மில்லியன் ரூபாய் புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கு வழங்கப்பட்டது.
2024 பெப்ரவரி 21 ஆம் திகதி நடைபெற்ற வீடு திறப்பு விழாவில் இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி அவர்களினால் அதிகாரவாணையற்ற அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அடையாளமாக வீட்டின் சாவி வழங்கப்பட்டது. மேலும் அவர்களின் புதிய வீட்டில் சீராகவும் வசதியாகவும் இருப்பதற்கும் அத்தியாவசிய வீட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மஹாவலி வெலிகந்த வதிவிட திட்ட முகாமையாளர் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.