Header

Sri Lanka Army

Defender of the Nation

08th February 2024 21:17:26 Hours

மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படையின் பாதுகாப்புப் படைத் பிரதானி இராணுவத் தலைமையக வருகை

மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையின் பாதுகாப்புப் பிரதானி லெப்டினன் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீப் அவர்கள் நல்லெண்ணப் பயணமாக தற்போது இலங்கை வந்துள்ள நிலையில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை வியாழக்கிழமை (8) இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.

வருகை தந்த இராணுவ பிரதானியை இராணுவ தலைமையக நுழைவாயிலில் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய வரவேற்கப்பட்டதுடன் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படையின் பாதுகாப்புப் பிரதானிக்கு இராணுவத் தலைமையகத்தின் முதன்மைப் பணி நிலை அதிகாரிகளை இராணுவத் தளபதி அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படையின் பாதுகாப்புப் பிரதானியுடன் அனைத்து சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்து குழு படம் எடுத்துகொண்டனர்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுடனான சந்திப்பின் போது மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படையின் பாதுகாப்புப் பிரதானி இலங்கை இராணுவம் மற்றும் மாலைத்தீவு பாதுகாப்புப் படை ஆகிய இருதரப்பு விவகாரங்கள் தொடர்பாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். இராணுவத் தளபதியின் அலுவலகத்திற்கு அவர் மேற்கொண்ட விஜயத்திற்கு முக்கியத்துவம் சேர்க்கும் வகையில், மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படையின் பாதுகாப்புப் பிரதானி தளபதியின் அலுவலகத்தில் உள்ள விருந்தினர் பதிவேட்டில் தனது பாராட்டு குறிப்புகளை பதிவிட்டார்.

மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படையின் பாதுகாப்புப் பிரதானி வெளியேறும் முன், இரு இராணுவத் தலைவர்களும் தங்களது புரிந்துணர்வு மற்றும் நல்லெண்ணத்தை குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் ஐஎஎன்பி பெரேரா ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படையின் செயற்பாடுகள் மற்றும் பயிற்சிகளுக்கான பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் ஜெனரல் ஹசன் ஷாஹித் மற்றும் இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் ஹசன் அமீர் ஆகியோரும் தளபதி அலுவலகத்தில் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.