31st January 2024 20:45:03 Hours
76 வது சுதந்திர தின உத்தியோகபூர்வ ஊடகவியலாளர் மாநாடு இன்று (ஜனவரி 31) அரசாங்க தகவல் திணைக்கள மாநாட்டு மண்டபத்தில் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ. அசோக்க பிரியந்த அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மாநாட்டின் போது, சுதந்திர தின கொண்டாட்டத்தின் நோக்கம், நிகழ்வுகள் மற்றும் படையினரின் அர்ப்பணிப்பு குறித்து ஊடகவியலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டதுடன், அன்றைய போக்குவரத்து திட்டத்தை பொலிஸார் தெளிவுப்படுத்தினர்.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி, விமானப்படைத் தளபதி, பதில் பொலிஸ் மா அதிபர், அரச அதிகாரிகள். மற்றும் பல ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.