04th January 2024 19:20:37 Hours
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 'லமா பியஸ' (சிறுவர்களுக்கான விடுதி) என்ற இரண்டு மாடிக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஜனவரி 04 ஆம் திகதி (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இந் நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இத்திட்டத்தை நிர்மாணிப்பதற்கான நிதிப் பங்களிப்பு ரொஷான் மஹாநாம அறக்கட்டளையினரால் ஒருங்கிணைக்கப்பட்டது. மருத்துவமனை நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, மேஜர் ஜெனரல் குமுதுபெரேரா (ஓய்வு) ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ அவர்களால் இராணுவத் தளபதிக்கு முன்மொழிய பட்ட முயற்சியில் படையினரால் இத் திட்டம் முன்னெடுக்கப் படுகிறது. அதற்கமைய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் ஆசியுடன், 12 வது பொறியியல் சேவை படையணியின் படையினரால் கட்டுமானத்திற்கான தொழில்நுட்ப மற்றும் மனிதவள உதவிகள் வழங்கப்படும்.
இந்நிகழ்வில் 61 வது காலாட் படைபிரிவின் தளபதி, ரொஷான் மஹாநாம அறக்கட்டளையின் அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.