20th December 2023 20:00:55 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் ஏ.கே ஜயவர்தன (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்களின் இராணுவ இறுதிச் சடங்கு இன்று (20) பிற்பகல் பொரளை பொது மயானத்தில் பூரண இராணுவ மரியாதையுடன் இடம்பெற்றது.
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மறைந்த போர் வீரர் தாய்நாட்டிற்காய் போர்க்களங்களில் அவரது துணிச்சலான நடத்தைக்காக 'ரண விக்கிரம பதக்கம்'(ஆர்டப்ளியூபீ), மற்றும் 'ரண சூரபதக்கம்'(ஆர்எஸ்பீ) ஆகிய விருதுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளார்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பொரளை மலர்சாலையில் உயிரிழந்த போர்வீரரின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். மறைந்த போர்வீரரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்ததுடன், பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போது அவரது அர்ப்பணிப்பு மற்றும் போர்த்திறன் குறித்து உயர்வாகப் பேசினார்.