12th December 2023 08:10:53 Hours
இந்தியாவிற்கான நல்லெண்ணப் விஜயத்தை மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை திங்கட்கிழமை (டிசம்பர் 04) இந்திய விமானப்படையின் தளபதி ஏர் சீப் மார்ஷல் விவேக் ராம் சௌதாரி பீவீஎஸ்எம் ஏவீஎஸ்எம் வீஎம் ஏடிசி அவர்கள் தமது அலுவலகத்தில் அன்பான வரவேற்பு அளித்து வரவேற்றார்.
பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தி, இருதரப்பு நலன்கள் மற்றும் பிராந்தியத்தில் செயல்படும் பாதுகாப்பு உத்திகள் குறித்து இரு தரப்பினரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். இறுதியில், பாராட்டு மற்றும் நல்லெண்ணத்தின் அடையாளமாக நினைவுச் சின்னங்களின் பரிமாற்றம் நடைபெற்றது.
இலங்கை இராணுவத்தின் இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, முழு பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரும் தளபதியின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியுமான பிரிகேடியர் பிஎம்எ பாலசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.