17th November 2023 10:45:19 Hours
குடாஓயா கொமாண்டோ பயிற்சி பாடசாலையில் காலமான பிரிகேடியர் எ.ஜீ.எஸ்.எம் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களுக்கு வியாழக்கிழமை (16) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
பொரளை ஜயரத்ன மலர் சாலைக்கு சென்ற லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மறைந்த சிரேஷ்ட அதிகாரியின் மனைவி, இரண்டு பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தனது ஆழ்ந்த அனுதாபத்தை வெளிப்படுத்தியதுடன் ஆறுதல் கூறினார். மே 2009 க்கு முன்னர் போர்க்களத்தில் இருந்தபோது, அவரது வீரம், தைரியம் மற்றும் நாட்டைப் பாதுகாப்பதில் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பு ஆகியவற்றை குடும்பத்தினருக்கு அவர் நினைவுபடுத்தினார்.
பூரண இராணுவ மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை (நவம்பர் 17) பொரளை பொது மயானத்தில் நடைபெறும்.
கெமுனு ஹேவா படையணியின் பிரிகேடியர் எ.ஜீ.எஸ்.எம் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் செவ்வாய்கிழமை (14) மாலை தனது 53 வது வயதில் காலமானார்.